Monday 18 September 2017

1960 கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தாருங்கள் இப்போ! நடக்கும் இதே பிரச்சனை



1960 கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தாருங்கள்
இப்போ! நடக்கும் இதே பிரச்சனை
காமராஜர் கேட்கிறார் நிஜலிங்கப்பாவிடன் இப்போது போலவே! அப்போதும் இல்லை என்ற பதில்.

செய்வது அறியாத ஐயா!
பிரதமர் நேருவிற்கு போன் செய்கிறார். நேரு கூறுகிறார் நான் பிரதமர் நான் தலையிட முடியாது
ஆனால் ஒரு வழி சொல்கிறேன் இப்போது கர்நாடகாவில் தொழில்சாலை வளர்ந்து வருகிறது அவர்களுக்கு மின்சாரம் தேவை நெய்வேலியில் கிடைக்கும் மின்சாரத்தை கொடுத்து நீரை பெற்று கொள்ளுங்கள் என வழி சொல்கிறார். அதையே ஐயாவும் செய்து மதுரைக்கு தண்ணீரை கொண்டுவருகிறார்.ஐயா சிந்திக்கிறார் 25% விகித மின்சாரத்தை கொடுத்தால் தமிழ் நாடு பற்றுக்குறையை சந்திக்க நேரிடும் எனவே! கர்நாடகாவின் தண்ணீரை கொண்டே குண்டா திட்டத்தை நிறைவேற்றுகிறார். வைகை டேம் தான் அது …

.அதைகொண்டு கர்நாடகாவுக்கு கொடுத்த மின்சாரத்தையும்உற்பத்தி செய்துவிடுகிறார். வைகை டேம் கட்ட இரு புரமும் மலை வேண்டும் என வல்லுநர் குழு கூறியது. ஆனால் மதுரையில் அந்த மலை இல்லை. பொறியாளர் தாமஸை அழைத்து மலை இல்லை என்றால் பரவாயில்லை நீ தைரியமாக கட்டு என்கிறார். தாமசும் கட்டி முடிக்கின்றார்.மொத்தம் ஒதுக்கப்பட்ட நிதி 2.75 கோடி

ஆனால் இரண்டு கோடியில் முடிக்கப்பட்டு 75லட்சத்தை திருப்பி தருகிறார் அரசுக்கு .ஐயா இந்த தொகையை தாமசிடமே கொடுத்து டேமை சுற்றி பார்க் கட்டுங்கள் அதை சினிமா துறைக்கு வாடகைக்கு விடுங்கள் அந்த தொகையை கொண்டு டேமை பராமரிப்பு செய்யுங்கள் என்றார் ஐயா..
இன்றைய அரசியல் ஜாம்பவான்களே இது தான் அரசியல் நிர்வாகம் இது தான் வளர்ச்சிக்கான திட்டம்.ஐம்பது வருடமாக நீங்கள் நிர்வாகத்தில் என்ன செய்தீர்கள் என்றே! தெரிய வில்லை

No comments:

Post a Comment