”மக்கள் குறைகள் ஃபஸ்ட் எம்எல்ஏக்கள் நெக்ஸ்ட்” தொடர்ந்து அசத்தும் சேலம் கலெக்டர் ரோகிணி!
சேலத்தில் நடைபெற இருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தில் இன்று எம்எல்ஏக்கள் மற்றம் கட்சி கார்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்திற்கு வந்த எம்எல்ஏக்கள் சேலம் கலெக்டர் ரோகிணிக்காக காத்திருந்தனர். ஆனால் கலெக்டரோ மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டரிந்து விட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்தே எம்எல்ஏக்களின் ஆய்வு கூட்டத்திற்கு வந்துள்ளார்.
மக்களுக்கு முக்கியத்தும் கொடுத்து எம்எல்ஏக்களை காக்க வைத்த சேலம் கலெக்டர் ரோகிணியின செயல் சேலம் மக்களை நெகிழ வைத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் சினிமா பாணியில் அதிரடிகளை செய்து அசத்தி வரும் சேலம் கலெக்டர் ரோகிணி மக்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகின்றார்!
Days at Salem collectorate are being numbered,one for sure!
ReplyDelete